3 மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான தீபாவளி பரிசு – மகிழ்ச்சியில் பணியாளர்கள்!
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மூன்று மாநில அரசுகள் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளனர்.
தீபாவளி பரிசு:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி உயர்வை பின்பற்றி தான் மாநில அரசுகளும் அகவிலைப்படியை வழங்கி வருகிறது. நடப்பு ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு குறித்து அரசு ஊழியர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – 10% விமான கட்டண சலுகை!!
இதனை தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அகவிலைப்படி நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டு மொத்தம் 46 சதவீதம் அகவிலைப்படி வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியான இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.