தமிழகத்தில் இன்று (நவ. 21) 20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.
வானிலை அறிக்கை
தமிழகத்தில் குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (நவ. 21) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தமிழக பள்ளி தலையாசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – 11 மணிக்கு குறுஞ்செய்தி கட்டாயம்!
அதே போல நாளை (நவ. 22) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போல நவ. 23 நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் நவ. 24 முதல் நவ.27 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் தமிழக கடலோரப்பகுதிகளில் நவ. 21 மற்றும் நவ.22 வரையும், வங்கக்கடல் பகுதிகளில் நவ.21 மற்றும் நவ. 22 வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.