
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், இன்று (ஜூன் 9) முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோடை வெயில் ஒரு பக்கம் கொளுத்தி வந்தாலும், அங்கங்கே கோடை மழை பெய்து மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது. அந்த வகையில் நேற்று (ஜூன் 8) காலை 8.30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல்பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிப்பர்ஜாய்” இன்று காலை 8.30 மணி அளவில் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கே சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில், மும்பை இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 820 கிலோமீட்டர் தொலைவில்,
தமிழகத்தில் இனி பைக் டாக்சிக்கு அனுமதியில்லை – போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் அறிவிப்பு!
போர்பந்தரில் இருந்து தென் தென்மேற்கே சுமார் 830 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையிலும் அதன் பின் அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையிலும் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும். மேலும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஜூன் 9) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஜூன் 10 முதல் 12 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளால் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஜூன் 13 ஆம் தேதியும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இன்றும் நாளையும் தமிழகத்தில் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் ஜூன் 9 முதல் 13 ஆம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல அரபிக்கடலில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.