மேல்முறையீடு செய்தோருக்கான ரூ.1000 உரிமைத்தொகை – பணி தொடக்கம்!!
தமிழகத்தில் 11.85 லட்ச குடும்ப தலைவிகள் மேமுறையீடு செய்துள்ள நிலையில் தகுதியுள்ளோருக்கு ரூ.1000 வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இது வரையிலும் இரண்டு தவணைக்கான தொகை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி முன்கூட்டியே ரூ. 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று அல்லது நாளை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் ஆவின் குடிநீர் தயாரிப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில், தமிழகத்தில் 11.85லட்சம் பேர் ரூ.1000 உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் ரூ.1000 வழங்குவது நிராகரிக்கப்பட்டால் மறுபடியும் மேல்முறையீடு செய்துகொள்ளலாம்.