தமிழகத்தை மிரட்டும் கனமழை எச்சரிக்கை – வானிலை மைய அறிக்கை!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்கள் அனைவரும் அதிக சிரமம் அடைந்து வருகின்றனர்.
வானிலை அறிக்கை:
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி நேற்று புதிதாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆந்திராவிற்கு தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இவை நாளை மேலும் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் மூன்றாம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய உள்ளது.
இன்று முதல் விசா இல்லாமல் சுற்று பயணம் – என்னென்ன நிபந்தனை தெரியுமா?
டிசம்பர் 4ஆம் தேதி வரை இந்த புயல் எச்சரிக்கை காரணமாக தமிழக மாவட்டங்களில் அதிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளிலும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை சூறாவளி காற்று அதி வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீனவர்கள் டிசம்பர் 4ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். குறிப்பாக ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Follow our Twitter Page for More Latest News Updates