தமிழகத்தில் வெங்காயம் விலை திடீர் உயர்வு.. ரூ.100க்கு விற்க வாய்ப்பு – அதிர்ச்சியில் மக்கள்!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று (அக்.28) ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் விலை
தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி உள்ளது. மேலும் விவசாயிகளிடம் மிகவும் குறைந்த அளவிலான வெங்காயம் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
திருமணம் தாண்டிய உறவுக்கு புதிய சட்டம் – நிலைக்குழு பரிந்துரை!
அதனால் வெங்காயம் வரத்து குறைந்துவிட்டது. எனவே கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மொத்த விற்பனை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதன் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி முதல் ரக நாசிக் வெங்காயம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.64க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனையில் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலைமை நீடித்தால் வெங்காயம் விலை கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படும் என பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.