பள்ளிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகள் வருகிற ஜனவரி 19-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளின் நடைமுறைகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அரசு நியமித்துள்ளது.
கண்காணிப்பு குழு:
தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. புதிய கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை புழல் சிறையில் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள்!!
இந்நிலையில் பள்ளிகள் திறந்தால் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை பள்ளிகள் கடைபிடிப்பது குறித்த கண்காணிப்பு குழுவை தமிழக அரசு நியமித்து உள்ளது. இந்த குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெயந்தி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனர் லதா, அதே துறையை சேர்ந்த கூடுதல் இயக்குனர் அமிர்தோஜதி உள்ளனர்.
அஞ்சல்துறை தேர்வுகள் தமிழ் மொழியில் எழுதலாம் – மத்திய அரசு அறிவிப்பு!!
மேலும் கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பணிகளை பார்வையிட உள்ளனர். மதுரை மாவட்டத்திற்கு, முறைசாரா கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் சேலம் மாவட்டத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி, திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்னையா, கள்ளக்குறிச்சி & கடலூர் மாவட்டங்களுக்கு இணை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்