அஞ்சல்துறை தேர்வுகள் தமிழ் மொழியில் எழுதலாம் – மத்திய அரசு அறிவிப்பு!!
அஞ்சல் துறையில் அக்கவுண்டண்ட் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அஞ்சல் துறை மற்றும் அக்கவுண்டண்ட் பணிக்கான தேர்வினை தற்போது தமிழ் மொழியிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு:
உலகிலேயே மிகப்பெரிய துறையான அஞ்சல் துறையில் காலியாக உள்ள அக்கவுண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இதற்கான தேர்வுகள் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நடைபெறும் இந்நிலையில் ஏற்கனவே அஞ்சல் துறை தேர்வுகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.
10 & 12ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடத்திட்டம் குறைப்பு – ஓரிரு நாட்களில் அறிவிப்பு!
ஆனால் தற்போது வெளியிடப்பட்ட அக்கவுண்டண்ட் பணிக்கான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தேர்வர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மதுரை எம்.பி.வெங்கடேசன், மத்திய தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கருக்கு கடிதம் எழுதினார்.
ரூ.45 ஆயிர ஊதியத்தில் விமானத்தில் வேலை 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!
இந்நிலையில் அஞ்சல்துறை தேர்வுகள் மற்றும் தற்போது வெளியான அக்கவுண்டண்ட் பணிக்கான தேர்வுகள் அனைத்தும் தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தபால் சேவை வாரியத்தின் உறுப்பினர் சந்தோஷ்குமார் கூறுகையில், “அஞ்சல்துறை தேர்வுகள் குறித்து ஜனவரி 4-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் உள்ள 12-வது சாரம்சம் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அஞ்சல் துறை தேர்வுகள் தமிழ் மொழியிலும் எழுதலாம் என திருத்தம் செய்துள்ளோம்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I need RRB job