10 & 12ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடத்திட்டம் குறைப்பு – ஓரிரு நாட்களில் அறிவிப்பு!

0
10 & 12ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடத்திட்டம் குறைப்பு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு!
10 & 12ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடத்திட்டம் குறைப்பு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு!
10 & 12ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடத்திட்டம் குறைப்பு – ஓரிரு நாட்களில் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 50% வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாடத்திட்டம் குறைப்பு:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. முதலில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டது.

ரூ.45 ஆயிர ஊதியத்தில் விமானத்தில் வேலை 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!

அதன்படி பெற்றோர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. தற்போது நடப்பு கல்வியாண்டு தொடங்கி 60 சதவீத நாட்கள் கடந்து விட்டது.

பொதுத்தேர்வு நடைபெற குறைந்த அளவிலான நாட்களே உள்ளதால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக குழு அமைக்கப்பட்டு உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு வினாக்கள் இடம் பெறும் என கூறப்படுகிறது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை – 305 காலிப்பணியிடங்கள் !!

தற்போது இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்து தொகுப்பறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. அது முதல்வர் அவர்களின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனை ஆராய்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பள்ளிக்கு நேரில் வர இயலாத மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களை படித்தாலே போதுமானது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!