சென்னை புழல் சிறையில் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள்!!
சென்னை மாவட்ட புழல் சிறையில் காலியாக உள்ள மத்திய சிறை-1-ல் தொழில்நுட்ப பணிகளான மின் கம்பியாளர் காலிப்பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கடைசி நாள் வருகிற திங்கள்கிழமை (18.01.2021)ஆகும்.
புழல் சிறை வேலைவாய்ப்பு:
சென்னை புழல் மத்திய சிறையில் மின் கம்பியாளர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது புழல் சிறையில் உள்ள மத்திய சிறை 1-ல் காலியாக உள்ள மின் கம்பியாளர் பணிக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் சமையலர் வேலை – விண்ணப்பிக்க இறுதிநாள்!
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க மூன்று வருடங்களுக்கு குறையாத காலத்திற்கு மின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் நடைமுறை அனுபவம், அதில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சம்மந்தப்பட்ட மின் பராமரிப்பு பணிகளில் செலவிடப்பட்டிருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும்.
10 & 12ம் வகுப்புகளுக்கு 50% வரை பாடத்திட்டம் குறைப்பு – ஓரிரு நாட்களில் அறிவிப்பு!
இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப வருகிற திங்கள்கிழமை (18.01.2021) ஆகும். அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய சிறை சிறைக்கண்காணிப்பாளர்,
மத்திய சிறை-1,
(தண்டனை) புழல்,
சென்னை- 66 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 044-26590615 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Hearty congratulations to you. Very happy with your service support and help with your search.thank you please send me your contact.