பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்து இருந்தார். இன்று பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சட்டமன்ற தேர்தல் தேதிகளை பொறுத்தே அது முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
பொதுத்தேர்வுகள் தேதி:
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு நிலவரம் குறைந்துள்ள போதிலும் பள்ளிகளை திறப்பதில் அரசு தயக்கம் காட்டி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், பிற மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் தொற்று ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்டவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500 – எந்த ரேஷன் கடையிலும் பெற முடியுமா??
இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் ஆன்லைன் & கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர். கடந்த கல்வியாண்டில் கொரோனா பாதிப்பால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு முடிவுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் இந்த நடைமுறையை பின்பற்ற வாய்ப்பில்லை. ஏனென்றால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்தாகி உள்ளது.
ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு உறுதி – மாநில அரசு திட்டவட்டம்!!
இதனால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்தே பொதுத்தேர்வுகள் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். அடுத்த 6 மாதங்களில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என உறுதியளித்த அமைச்சர், 52 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Sir pona வருஷம் school வைத்து எக்ஸம் வைக்கவில்லை இந்த வருஷம் பள்ளிகல் வைக்கவில்லை ஆனால் exam மட்டும் வைக்கிரிகள் ஆன்லைன் கிளாஸ்ல ஒன்னும் புரயவில்லை ஆகையால் ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்