ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு உறுதி – மாநில அரசு திட்டவட்டம்!!

0
ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு உறுதி - மாநில அரசு திட்டவட்டம்!!
ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு உறுதி - மாநில அரசு திட்டவட்டம்!!
ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு உறுதி – மாநில அரசு திட்டவட்டம்!!

இங்கிலாந்தில் இருந்து பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் ஜனவரி 1 முதல் பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையிலும், அந்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், மாநில அரசுகள் அந்தந்த மாநில பாதிப்பு நிலவரங்களை பொறுத்து அது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி ஆந்திரா உட்பட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு கொரோனா பரவிய காரணத்தால் மீண்டும் மூடப்பட்டது.

பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500 – எந்த ரேஷன் கடையிலும் பெற முடியுமா??

தமிழகத்தில் இதுவரை பள்ளிகள் திறப்பு குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளும் கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்து இருந்தார். ஆனால் இங்கிலாந்தில் இருந்து கர்நாடகா திரும்பிய 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இது உருமாறிய கொரோனாவாக இருக்குமோ என்கிற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடியூரப்பா, பள்ளிகள் திறப்பு முடிவை தள்ளிவைப்பதாக வெளியான தகவலை முற்றிலும் மறுத்துள்ளார். திட்டமிட்டபடி, ஜனவரி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதுகலை ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

மேலும் கர்நாடக மாநிலத்தில் புதிய உருமாறிய கொரோனா பரவவில்லை, எனவே அதை கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார். இதனால் ஜனவரி 1ம் தேதி பள்ளிகள் திறப்பு முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக கூறியுள்ளார். ஏற்கனவே அம்மாநிலத்தில் புத்தாண்டு நேரத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் கடும் எதிர்ப்புகள் காரணமாக கடைசி நேரத்தில் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!