தமிழக அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு!!
தமிழக அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்க மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டு உபகரணங்கள்:
தமிழக அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு உபகரணங்கள் வாங்க மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் விளையாட்டு மற்றும் உடற்கல்வி மானியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமராஜர் பல்கலை எம்.பில் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் – பிப்ரவரி 10 வரை கால அவகாசம்!!
இதன்படி தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000, நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.10000, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ.25000 வழங்கப்படும். மேலும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புவரை, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் பட்டியல் தயாரித்து வழிகாட்டுதல்கள் அனுப்பப்படுகிறது.
பழைய ஓய்வூதிய கொள்கை கோரிக்கை – ஜாக்டோ ஜியோ 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம்!!
இதன் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி மூலமாக தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்க வேண்டும் என மாவட்ட திட்ட இயக்கம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு திறனை மேம்படுத்துவது மூலமாக அவர்கள் அரசு பணிகள் மற்றும் உயர் படிப்புகளில் சிறப்பு சலுகைகள் பெறலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்