தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு – 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது கட்டாயமாக கொண்டு வர வேண்டியவை குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள், கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டு உள்ளன. பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் சிறு சிறு தேர்வுகளை நடத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காமராஜர் பல்கலை எம்.பில் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் – பிப்ரவரி 10 வரை கால அவகாசம்!!
இதற்கிடையில் பிப்ரவரி மாதம் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், முக்கிய தளர்வாக வரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இம்மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. மேலும் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமர வைத்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு – அதிகாரபூர்வ எச்சரிக்கை அறிவிப்பு!!
தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது பெற்றோர்களிடம் கட்டாயமாக எழுத்துப்பூர்வ அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்