தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?? ஜனவரி 12ம் தேதிக்குள் முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அல்லது நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த நவம்பர் மாதம் 6-ஆம் தேதி பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அதிகப்படியான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கபட்டது.
பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!
இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாலும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாலும், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால், 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதன்படி இரண்டாம் கட்ட பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் ஜனவரி 6 முதல் 8ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 80% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள கருத்து தொகுப்பினை பெற்று சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அது பட்டியலிடப்பட்டு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலவச டேட்டா பள்ளி மாணவர்களுக்கு வழங்காதது ஏன்? தமிழக அரசிடம் கேள்வி!!
அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆராய்ந்து முடிவுகளை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதனை அடுத்து பள்ளிகள் திறப்பதா? வேண்டாமா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அல்லது நாளை முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்