தமிழக தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அதிரடி முடிவு!

0
தமிழக தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை அதிரடி முடிவு!
தமிழக தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை அதிரடி முடிவு!
தமிழக தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அதிரடி முடிவு!

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் சுமார் 1040 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை பழைய நிலைக்கு பணியிறக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வெளியான தகவல்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் சுமார் 1040 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களாக பழைய நிலைக்கு பணியிறக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை தொடங்கி உள்ளது.

2024: நாடாளுமன்ற தேர்தல் – பணிகள் தீவிரம்.. ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

வழக்கமாக அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் என 3 வகையாக நிலைகளில் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு முதுநிலை ஆசிரியா் அல்லது உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் என 2 வகையான பதவி உயா்வுகள் வழங்கப்படும். அவ்வாறு முதுநிலை ஆசிரியராக பதவி உயா்வு பெற்றால், அடுத்த பதவி உயா்வை பெற சில ஆண்டுகள் தாமதமாகும். இதனை தடுக்க ஆசிரியா்கள் தங்களின் பட்டதாரி ஆசிரியா் பணிமூப்பு அடிப்படையில் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயா்வு பெறுகின்றனா்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இதை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் பள்ளி தலைமை ஆசிரியா்களாக பதவி உயா்வு பெற்ற முதுநிலை ஆசிரியா்களின் நியமனம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி சுமார் 1,040 உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்களாக பழைய நிலைக்கு பணியிறக்கம் செய்யப்பட உள்ளனா். அவா்களில் சிலர் வட்டார வள மைய கண்காணிப்பாளா்களாக நியமிப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!