தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களின் எதிர்பார்ப்பு இதுதான்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் பொழுது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாதுகாப்புடன் நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பெற்றோர்கள் எதிர்பார்ப்பு:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று அச்சத்தால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில், வீட்டில் பெற்றோர்களுக்கு நாட்கள் செல்ல செல்ல பணிச்சுமை அதிகரித்தது. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்தாததால் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம் அலுவலக வேலை, மறுபக்கம் பிள்ளைகளின் ஆன்லைன் கல்வி கவலை என ஊரடங்கில் படாதபாடுபடுவதாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – உயர்கல்வித்துறை விளக்கம்!!
புதிய கல்வியாண்டில் ஆவது அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் 2வது அலை வீச தொடங்கி உள்ளது. இதனால் அரசு மீண்டும் காலவரையற்ற விடுமுறையினை பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவித்துள்ளது. இது பெற்றோர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருந்தாலும், கற்றல் திறன் பாதிக்கப்படுவது சற்று வேதனை ஆன விஷயமே.
TN Job “FB Group” Join Now
மேலும் பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் மாணவ, மாணவிகளும் உற்சாகமின்றி காணப்படுகின்றனர். பள்ளி நண்பர்களை சந்தித்தல், ஆசிரியர்களிடம் நேரடியாக சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளுதல் போன்றவற்றால் மனஅழுத்தம் குறையும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வியை சிறந்த முறையில் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அது எந்த அளவிற்கு பயன் அளித்துள்ளது என்பது கேள்விக்குறியே!
தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆணையர் தகவல்!!
எனவே அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றி அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
Please open school in June
Please open school in May
S plzzzz open the school with Very very safe we r can’t attend the online class student can’t lesson
Please open school…