தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆணையர் தகவல்!!
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் சார்பில் ஓய்வூதியர்களுக்கான குறை தீர் கூட்டம் வரும் திங்கள்கிழமை (12-04-2021) அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைதீர் கூட்டம்:
ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக ஆணையர் ரௌஷன் காஷ்யப் தெரிவித்துள்ளதாவது, ‘வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கான ஏப்ரல் மாத குறைதீர் கூட்டம் வரும் திங்கள் கிழமை (12-04-2021) நடைபெறவுள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கும் இந்த குறைதீர் கூட்டம் நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் மண்டல ஆணையர் ஓய்வூதியதாரர்களின் குறைகளை கேட்பார். இதில் அனைத்து ஓய்வூதியதாரர்களும் கலந்து கொண்டு குறைகளை மண்டல அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு – 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!!
மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 58 வயது நிறைவடைந்த அனைத்து வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஓய்வூதிய விண்ணப்பம் செலுத்துவதில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம்’ என கூறப்பட்டிருந்தது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்