தமிழகத்தில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – உயர்கல்வித்துறை விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மூடப்பட்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுமா? என்று குழப்பம் நிலவி வருகிறது.
நேரடி வகுப்புகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தியது. பின்பு கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமே வருகை தந்து ஆன்லைன் மூலம் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு – ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் பலன்கள்!!
தற்போது தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுமா? என்று தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது இது குறித்து உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அரசு அனுமதி அளித்தால் மட்டுமே நேரடி வகுப்புகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும். அதுவரை மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு மற்றும் தேர்வுகள் நடைபெறும் என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.