தமிழக அரசு பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – தலைமை ஆசிரியருக்கு கொரோனா!!
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் உட்பட 6 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் பொதுத்தேர்வு காரணமாக தொடங்கப்பட்டன. மேலும் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
TN Job “FB Group” Join Now
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். மேலும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல் போன்ற செயல்பாடுகளை கட்டாயம் பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் சில இடங்களில் உள்ள பள்ளிகளில் கொரோனா தாக்கத்தினால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 15,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குணமணடைந்தோர் எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வயது வரம்பு – TRB பதிலளிக்க உத்தரவு!!
வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பள்ளியில் உள்ள வகுப்புகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா தாக்கம் உள்ள வகுப்பறையில் உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.