தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – TRB பதிலளிக்க உத்தரவு!!
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என தொடங்கப்பட்ட வழக்கில் TRB பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகளில் வயது வரம்பு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என அறிவித்திருந்தது. அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 32% அகவிலைப்படி – உண்மை நிலவரம் என்ன?
எனவே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட வயது வரம்பு அறிவிப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் வயது வரம்பை பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி TRB வெளியிட்டது. அதில் SC/ST பிரிவினருக்கான வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான உரிய வயது வரம்பை அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்