அரசு பள்ளிகளில் 1 முதல் 10 வகுப்பு வரை ‘கணினி அறிவியல்’ பாடம் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
அரசு பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி பாடம் கட்டாயம் என தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் விளக்கியுள்ளது.
கணினி அறிவியல் பாடம்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் காரணமாக அது வெறும் கண்துடைப்பாக உள்ளதாக தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதுகுறித்து மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன் கூறுகையில், “தமிழக அரசு அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதன் இறுதியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணிப்பொறியியல் அறிமுகம் செய்யப்படும் என்ற வார்த்தை இருந்தது. மேலும் இந்த அறிவிப்பு குறித்து விளக்கமும், ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு குறித்தும் இந்த அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனவே இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க தேர்தல் சார்ந்ததாகவே உள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கணனி திறனை வளர்க்கவே ஆசிரியர் சங்கத்தினர் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினி பாடம் கட்டாயம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்”, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்