குமரி மாவட்டத்தில் 487 பள்ளிகள் திறப்பு – 97,959 மாணவர்களை கண்காணிக்கும் பணி தீவிரம்!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் திறக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 487 பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் நேரடி வகுப்புகளில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
எம்.டெக் பாடப்பிரிவுகள் மாணவர் சேர்க்கை ரத்து இல்லை – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
மேலும் அந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து பெரும் பாதிப்பு இல்லாத காரணத்தால் பெற்றோர்களின் அனுமதியுடன் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் என 487 பள்ளிகளில் உள்ள 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறந்த பின் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகின்றனவா என்பதை பார்வையிட அரசு சார்பில் 72 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் – பிப்ரவரி 11 கடைசி நாள்!!
72 குழுக்கள் பற்றிய அறிவிப்பு:
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய பகுதிகளில் உள்ள கல்வி அலுவலர்கள் 4 பேர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்கள் 50 பேர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 3 பேர்.
நீட் தேர்வு 2021 தேதி அறிவிப்பு – மத்திய அரசிடம் மாணவர்கள் கோரிக்கை!!
வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 5 பேர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் 8 பேர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி திட்ட அலுவலர் ஒருவர், இடைநிலை கல்வி திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் என்று 72 குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகள் கொரோனா விதிகளை பின்பற்றுகின்றனவா எனஆய்வு செய்தனர்.
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
மாணவர்களின் வருகை எண்ணிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மொத்தம் 48 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு திறக்கப்பட்டு பள்ளிக்கு வருகின்றனர். தற்போது 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் என 97 ஆயிரத்து 959 மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இதனால் பள்ளிகளில் கொரோனா பரவாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்