எம்.டெக் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை ரத்து இல்லை – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக்., 2 பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடைபெறும் என பல்கலை நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் கூடுதல் இடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலை அறிவிப்பு:
அண்ணா பல்கலைக்கழகத்தில் அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் எம்.டெக் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அதில் தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுதை ஏற்க மறுத்து எம்.டெக் பிரிவில் பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் – பிப்ரவரி 11 கடைசி நாள்!!
இந்த அறிவிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.டெக் மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கு அழகல்ல என கண்டனத்தை பதிவு செய்து பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறுகையில், இடஒதுக்கீடு வழங்குவதற்கு அண்ணா பல்கலையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!!
இந்நிலையில் அண்ணா பல்கலை சார்பில் இன்று வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், எம்.டெக் பாடப்பிரிவில் பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநில அரசின் இடஒதுக்கீட்டினை அமல்படுத்த 9 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்