தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பட்டியல் – நாளை வெளியீடு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்கி மே மாதம் 21 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் குறைந்த இடைவெளியில் பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர அனைத்து வகுப்பினருக்கும் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக பல மாதங்களாக வகுப்புகள் நடத்தப்படாமல் தேர்வுகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு தேர்வுகளை எளிமைப்படுத்த அரசு பாடத்திட்டங்களை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.
TNPSC பணியிடங்களில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இதுகுறித்து தேர்வு துறை இயக்குனரகம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறுகையில்,” தேர்வு துறை இணையதளத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் நாளை முதல் வெளியிடப்படும்.
அரசு ஓய்வூதியதரர்களுக்கு ஆயுள் சான்றிதழ் பெற ஆதார் எண் கட்டாயமில்லை – மத்திய அரசு அறிவிப்பு!!
அவற்றை சரி செய்ய ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தேர்வு துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.