அரசு ஓய்வூதியதரர்களுக்கு ஆயுள் சான்றிதழ் பெற ஆதார் எண் கட்டாயமில்லை – மத்திய அரசு அறிவிப்பு!!
அரசு ஓய்வூதியதாரர்கள் மின்னணு முறையில் ஆயுள் சான்று பெற ஆதார் எண்ணை அளிக்க வேண்டியது கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஓய்வூதியதரர்களுக்கான அறிவிப்பு:
அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதியம் பெற ஆண்டு தோறும் தங்களது ஆயுள் சான்றை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிப்பதன் மூலமாக அவர்களுக்கு தடையில்லாமல் ஓய்வூதியம் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்று பெற ஆதார் எண்ணை தெரிவிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மின்னணு முறையில் ஆயுள் சான்று பெரும் முறையை மத்திய மின்னணு தகவல்தொழில் நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும் மின்னணு முறையில் சான்று பெற ஆதார் எண் கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா காலத்தில் வயதில் மூத்த ஓய்வூதியத்தார்கள் நேரில் வர தேவையில்லை. ஏற்கனவே மின்னணு முறையில் ஆயுள் சான்றிதழ் பெற ஆதார் அட்டை இல்லாதவர்களும், கைவிரல் ரேகை சரியாக பதிவு செய்ய முடியாதவர்களுக்கும் சிக்கல் இருந்தது.
தமிழகத்தில் முதுகலை நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் – மதுரை எம்.பி கடிதம்!!
ஆனால் தற்போது அது சரி செய்யப்பட்டு ஓய்வூதியதாரர்கள் ஆதார் அல்லாத வேறு அடையாள சான்றை அளித்தால் போதும். மேலும் அரசு அலுவலங்களில் வருகைப்பதிவு செய்ய மத்திய தகவல் மையம் உருவாக்கிய சந்தோஷ் செயலி உபயோகப்படுத்த வேண்டும் எனவும் அதற்கும் ஆதார் கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போ ஆதார்க்காக செலவு செய்த ரூபாய் 25000கோடி வீனா போச்சா?
வரும் ஏப்ரல் 6 ந்தேதி வரை பெட்ரோல் டீசல் விலை உயராது. தேர்தல் முடிந்த மறுநாள் முதல் மீண்டும் உயரும்.
ஆதார் கார்டு நம்பரை பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். எல்லாரும் இணத்தவுடன் இணைப்பு அவசியம் இல்லை என்று சொல்கிறார்கள்.