தமிழகத்தில் முதுகலை நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் – மதுரை எம்.பி கடிதம்!!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கூடுதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என மதுரை எம்.பி.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு மையங்கள்:
நாடு முழுவதும் உள்ள மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை பெற நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 255 நகரங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தேர்வு எழுத விண்ணப்பங்கள் அனுப்ப மார்ச் 15 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்நிலையில் தேசிய தேர்வு கழகம் நடத்தும் இந்த தேர்வில் ஆன்லைன் பதிவின் போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு மையங்கள் கிடைக்காமல் மற்ற மையங்களுக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 11,013 தேர்வர்களும் , புதுச்சேரியில் 603 தேர்வர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 2000 + காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு எப்போது ? – பட்டதாரிகள் தவிப்பு
இந்நிலையில் அவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி முக்கியமானது தான் இருந்த போதிலும் கொரோனா காலத்தில் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வது ஏற்க முடியாது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதுகலை நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு மதுரை எம்.பி. வெங்கடேசன் தேர்வு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் அதிகரிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
அதற்கு பதில் கடிதம் அனுப்பிய தேர்வு கழக நிர்வாக இயக்குனர் பேரா பவானிந்திரா லால் கூறுகையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,131 தமிழக தேர்வர்களும், 63 புதுச்சேரி தேர்வர்களும் அனைவருக்கும் அந்தந்த மாவட்டங்களில் தேர்வு மையங்கள் வழங்கப்பட்டது. அஞ்சல் முகவரி உள்ள மாநிலத்தில் மையத்தை ஒதுக்க எல்லா முயற்சியும் மேற்கொண்டு வருகிறோம். தேர்வு மையங்களில் உள்ள கட்டமைப்பு வசதி, மற்றும் கொரோனா சமூக இடைவெளி காரணமாக இருக்கைகளை காலியாக விட்டு தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது”, என அவர் தெரிவித்தார்.