தமிழகத்தில் 2000 + காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு எப்போது ? – பட்டதாரிகள் தவிப்பு
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறை அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இன்னும் விண்ணப்பிப்பதிவு தொடங்காமல் உள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தமிழக ஆசிரியர்கள் தேர்வு வாரியம் தேர்வின் மூலம் தேர்வு செய்கிறது. ஆசிரியர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப தகுதி தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதன் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். நடப்பு ஆண்டில் கொரோனா தொற்றின் அச்சத்தின் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடக்க உள்ளது.
தமிழகத்தில் விடுமுறை நாட்களில் ஆன்லைன் தேர்வுகள் – பள்ளிகள் அறிவிப்பு!!!
நடப்பு ஆண்டு தேர்வுகள்:
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2,098 காலிப்பணி இடங்களுக்கான நடப்பு ஆண்டு தேர்வுகள் ஜூன் 26 மற்றும் 27ம் தேதி ஆன்லைன் முறையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் மார்ச் 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவித்தது.
ஜூன் மாத தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை பயன்படுத்த முயன்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பதிவு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் விண்ணப்பதிவு தொடங்கும் நாட்கள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு செய்வதற்காக மார்ச் 25ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கட்டிருந்த நிலையில் இன்னும் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் முதுகலை பட்டதாரிகள் தொடர்ந்து கவலையில் உள்ளனர்.
இது குறித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஒருவர்,” தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த ஆன்லைன் விண்ணப்பப் பதிவுகள் இன்னும் முறையாக்கப்படாமல் உள்ளது. இதனால் தேர்வை தள்ளி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கலாம். உடனே தாமதிக்காமல் ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்