TNPSC பணியிடங்களில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்வழி இடஒதுக்கீடு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) என பல்வேறு அரசுத்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இதுகுறித்து மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆங்கில வழியில் பயின்றவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அரசு ஓய்வூதியதரர்களுக்கு ஆயுள் சான்றிதழ் பெற ஆதார் எண் கட்டாயமில்லை – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.