தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் மழை – சென்னையில் வீசும் சூறாவளி காற்று!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தற்போது மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் தர்மபுரி, தேனி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை:
தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது சென்னையில் ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், காயரம்பேடு, தாம்பரம், கூடுவாஞ்சேரி, தைலாவரம், பெருமாட்டு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து மதுரை, தேனி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அஞ்சல் துறையில் டிரைவர் வேலை.. மாதம் ரூ.63,200 ஊதியம் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
அதே போல சேலம், ஈரோடு, திருச்சி, கடலூர், தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, திருவள்ளூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.