தமிழகத்தில் நாளை (மே 8) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் – மின்வாரிய அலர்ட்!
தமிழக துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்பட உள்ளது. இதற்கான பட்டியல் அதிகாரபூர்வ தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழக அரசு மாநிலத்தின் அனைத்து துணை மின் நிலையத்திலும் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதற்காக பகுதி வாரியாக முன் கூட்டியே மின்தடை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுவருகிறது. அதன்படி, நாளை (மே 8) அன்று தமிழகத்தின் முக்கிய சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும்.
மின்தடை பகுதிகள்:
புல்வாய்க்கரை:
பூம்பிடாகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
காரியாபட்டி:
கல்லுப்பட்டி, காரியாபட்டி, மந்திரியோடை, பாப்பனம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி.
தாழையூத்து:
தாழையூத்து, சந்திப்பு, பேட்டை, தென்கலம், சங்கர் நகர்.
ஆனைமலை:
ஆனைமலை, ஒடையகுளம், குப்புச்சிபாளையம், ஆர்.சி.புரம், கிழவன்புதூர், பெரியபோது, எம்.ஜி.புதூர், சி.என்.பாளையம், எம்.ஜி.ஆர்.புதூர், தாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
ஆவியூர்:
ஆவியூர், அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி.
அச்சம்பத்து:
அச்சம்பத்து, நாகமலைபுதுக்கோட்டை, என்.ஜி.ஓ.காலனி, வடிவேல்கடை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி.கீழமாத்தூர், ராஜாம்பாடி, வடபழஞ்சி,, தத்தனூர், கரடிப்பட்டி, ஆலம்பட்டி.
கானாடுகாத்தான்:
கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், கொத்தமங்கலம்.
அ.மேட்டூர்:
பெரியசாமி கோவில் பூஞ்சோலை வெப்பாடி கடம்பூர்.