தமிழகத்தில் நாளை மறுநாள் ( 9.10.2023) மின்தடை பகுதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின்தடை செய்யப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நாளை மறுநாள் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழக அரசு மின்வாரியங்களில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், தேவையற்ற மின்தடையை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாதம் தோறும் துணை மின் நிலையங்களில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை படுகிறது.
EPFO திட்ட பயனாளிகளே… இத்தனை வசதிகளும் உங்களுக்கு தான் – முக்கிய தகவல்கள்!
அக்டோபர் 9ம் தேதியான நாளை மறுநாள் ( திங்கட்கிழமை) நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை ஆரப்பாளையம், மீனாட்சியம்மன் கோயில், அரசரடி , பாசூர் துணை மின் நிலைய பகுதிகள், ராஜபாளையம், எரிச்சநத்தம், நரிக்குடி, பரலாச்சி, முத்துராமலிங்கபுரம், மெட்ரோ, கரூர், சாலைப்புதூர், வடுகபட்டி, மாங்கூன், கானூர்புதூர் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.