தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோடை காலம் முடிந்துள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது. அந்த வகையில் சென்னை மண்டல வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளால் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செல்போன் செயலி மூலம் அரசு பேருந்து விவரங்கள் – அரசு அறிவிப்பு!
மேலும் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி சேலம், ஈரோடு, கடலூர், தருமபுரி, பெரம்பலூர், ராமநாதபுரம், அரியலூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இலேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.