தமிழகத்தில் செல்போன் செயலி மூலம் அரசு பேருந்து விவரங்கள் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் குறித்த விவரங்களை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வகையில் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அரசு பஸ்கள்
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் மொத்தம் 7 இருக்கின்றன. அதில் எந்தெந்த பஸ் நிறுத்தத்திற்கு எப்போது பஸ் வரும், அங்கிருந்து எப்போது புறப்படும் என்பது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள செல்போன் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் டெண்டர் விட்டுள்ளன.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விழுப்புரம், திருநெல்வேலி, கும்பகோணம், சேலம், மதுரை, கோவை ஆகிய 7 போக்குவரத்து கழகங்களில் நிறுத்தத்திற்கு வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் குறித்து செல்போன் செயலோ மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பஸ் வழித்தடங்களில் பஸ்களின் வருகை, புறப்படும் நேரம் குறித்து தகவல்களை அந்த செயலி வழங்கும்.
தமிழக பள்ளி மாணவர்களின் உடல்நலம் ஆய்வு – கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்!
இந்த டெண்டரில் 7 போக்குவரத்து கழகங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு, செயல்படுத்தும், ஒருங்கிணைப்பு, வாகன திட்டமிடல் ஆகிய அம்சங்கள் இருக்கும் எனவும், இந்த வசதி 2213 புதிய டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்களில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வசதி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.