தமிழக மருத்துவப்படிப்புகளுக்கான 7.5% இடஒதுக்கீடு வழக்கு – தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தொங்கப்பட்ட வழக்கை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
மருத்துவ இடஒதுக்கீடு:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புகளுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். அதன்பின் அரசு நிதியுதவியில் கல்வி வழங்கும் திட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து 83% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் 158 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனால் அரசு பள்ளியில் முழுமையாக படிக்காவிட்டாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,” மனுதாரர் உள்ஒதுக்கீடு வழக்கை எதிர்த்து வழக்கு போடவில்லை. இடஒதுக்கீடு சலுகையை மறுத்து அதிகாரிகள் தெரிவித்த வழக்கை எதிர்த்து தான் வழக்கு போட்டுள்ளார். அடுத்த ஆண்டு இது போல மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். இதுபோல எதிர்காலத்தில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க கல்வியாளர்களும், அதிகாரிகளும் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு தீர்ப்பு வழங்கி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்