தமிழ்நாடு அரசு பாலின் விலையை உயர்த்துமா…?? சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்
தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பால் சந்தைகளில் 84% தனியார் நிறுவனங்களிடமே உள்ளது. எனவே, இதனை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. மேலும், சமீபத்தில் ஹட்சன் நிறுவனமானது, ஆரோக்யா பாலின் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் கிலோவிற்கு 3 ரூபாயும் உயர்த்தியது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் சோகத்தில் உள்ளனர்.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம்.. எங்கு எப்போது நடைபெறவிருக்கிறது என்று தெரியுமா..?
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “பால் உற்பத்தியாளர்களும் ஏழை, அதை வாங்கி பருகும் மக்களும் ஏழை”. எனவே, “தனியார் நிறுவனங்கள் பாலின் விலையை உயர்த்தினாலும், தமிழ்நாடு அரசிற்கு உயர்த்தும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், தனியார் துறை பால் ஒரு லிட்டருக்கு ரூ. 56 க்கு விற்கும் நிலையில், தமிழ்நாடு அரசு ரூ. 40 க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.


























