தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழக அரசு ஊழியர்கள் முன்னதாக 2023 ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு 46 சதவீத அகவிலைப்படி பெற்று வந்தனர். மேலும் நடப்பு மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிடப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். வெளியான ஏஐசிபிஐ குறியீட்டு தகவல்களின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த வாரம் நான்கு சதவீத விலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனை பின்பற்றி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி தற்போது நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் CAA சட்டம் அமலாகுமா? – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
இதன் மூலமாக தமிழக அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து, அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி ஆனது கடந்த ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், மார்ச் மாதத்திற்கான ஊதியத்துடன் நிலுவையில் உள்ள மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பினால் தமிழக அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.