மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி இருக்கும் நிலையில், இந்த சட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதல்வர் அறிவிப்பு
மத்திய அரசு நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதில் தமிழக அரசும் ஒன்று. காரணம் பட்டியலில் இடம்பெறாத சிறுபான்மையினர், இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் போன்றோர் இந்த சட்டத் திருத்தத்தின் மூலமாக இந்தியக் குடியுரிமை பெற வழிவகை செய்யப்படவில்லை.
அரசு ஆவணங்களில் தாயின் பெயர் அவசியம் – தந்தை பெயர் தேவை இல்லையா?
எனவே தமிழகத்திலும் இதற்கு எதிர்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்த இருக்கும் சிஏஏ இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது என முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கேரளா அரசு இது அமலாகாது என அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.