மகாராஷ்டிரா அரசு ஆவணங்களில் தாயின் பெயரை சேர்ப்பதை கட்டாயமாகியுள்ளது. இவ்விதிமுறை மே 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
அரசு ஆவணங்களில் மாற்றம்:
ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளின் பெயர் கட்டாயமாக்கப்பட விதிமுறையானது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது. இருப்பினும் இதுவரை ஆதார் கார்ட், பான் கார்ட், பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசின் ஆவணங்கள் அனைத்திலும் உரிமையாளரின் தந்தை பெயர் மட்டுமே இடம் பெற்று வந்தது. இந்த ஆவணங்களிலும் தாயின் பெயரை இணைப்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து பொது மக்கள் மனதில் இனி தந்தை பெயரை சேர்ப்பது அவசியமா என்னும் குழப்பமும் எழுந்துள்ளது.
ரூ.30,000/- ஊதியத்தில் SAI நிறுவனத்தில் வேலை – Diploma தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!
இந்நிலையில் இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக மகாராஷ்டிரா அரசானது புதிய விதிமுறையை பொது மக்களுக்கு விதித்துள்ளது. இவ்விதிமுறையின் படி, பிறப்புச் சான்றிதழ், பள்ளி ஆவணங்கள், பான் கார்ட் போன்ற அரசு ஆவணங்களில் தாயின் பெயரும் கட்டாயம் சேர்க்க பட வேண்டும். அதாவது தந்தையின் பெயருடன் தாயின் பெயரும் அரசு ஆவணங்கள் அனைத்திலும் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இது வருகின்ற மே 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.