அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிஇஓ பதவி உயர்வு – ஆசிரியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 57 வயதை கடந்த தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார அலுவலர் (பிஇஓ) பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு:
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்களில் 57 வயதை கடந்தவர்களுக்கு பிஇஓ பதவி உயர்வு வழங்க வேண்டும் என நேற்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் சங்க மாநில செயலாளர் வி.சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “57 வயதை கடந்த தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் பிப்ரவரி 27, 28 ஆம் தேதி நடைபெற உள்ள தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை பொதுமாறுதல் பதவி உயர்வு வழங்கப்பட்ட பின் நடத்தப்பட வேண்டும். மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட்ட பின் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் 5 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!!
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமனம் படிப்படியாக வழங்க வேண்டும். மேலும் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்களில் கர்ப்பிணிகள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை நீக்க வேண்டும்.
தமிழக இளங்கலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நிறைவு சான்றிதழ் – மாணவர்கள் கோரிக்கை!!
மேலும் மே மாதம் 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கப்பட உள்ளதால் அவர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு வழங்க வேண்டும். மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாட்கள் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்”, இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்