தமிழகத்தில் 5 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து மக்கள் நலவாழ்வுத்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளதாக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்வு சுமையை குறைக்க பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக இளங்கலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நிறைவு சான்றிதழ் – மாணவர்கள் கோரிக்கை!!
இந்நிலையில் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுமா என அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து தற்போது 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து மக்கள் நலவாழ்வுத்துறையுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்