
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..உங்கள் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்…!! “உடனே பாருங்க”..!!
தமிழக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிதி உதவி மற்றும் நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் கோடிக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, 6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து முடித்து உயர்கல்விக்காக தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடு கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை பெற்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் முதல் பயண தொகையை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளது, இதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்கு ரூ. 6 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

























