தமிழக அரசு 69% இடஒதுக்கீடு வழக்கு – மார்ச் 5 ஆம் தேதி விசாரணை!!

0
தமிழக அரசு 69% இடஒதுக்கீடு வழக்கு - மார்ச் 5 ஆம் தேதி விசாரணை!!
தமிழக அரசு 69% இடஒதுக்கீடு வழக்கு - மார்ச் 5 ஆம் தேதி விசாரணை!!
தமிழக அரசு 69% இடஒதுக்கீடு வழக்கு – மார்ச் 5 ஆம் தேதி விசாரணை!!

தமிழக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69% இடஒதுக்கீடு வழங்குவதை தடை செய்யக்கோரிய வழக்கு விசாரணை மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் அறிவிப்பு:

தமிழக அரசு சார்பில் எஸ்.சி. – எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 69% இடஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், மண்டல கமிஷன் வழக்கில் 1992ல் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அந்த உத்தரவை எதிர்த்து 69 சதவிகிதம் வரை இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. எனவே இந்த இடஒதுக்கீடு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் “ஆல் பாஸ்” முறை – ஆசிரியர்கள் கருத்து!!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் இந்த இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குடன் அந்த வழக்கையும் சேர்த்து மார்ச் 5 ஆம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் எஸ்.சி. – எஸ்.டி. மற்றும் சிறுபான்மையினர் சங்கம் சார்பில் “இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்து கொள்ள வேண்டும்” என மனு வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!