தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் “ஆல் பாஸ்” முறை – ஆசிரியர்கள் கருத்து!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள்
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் "ஆல் பாஸ்" முறை - ஆசிரியர்கள் கருத்து!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் “ஆல் பாஸ்” முறை – ஆசிரியர்கள் கருத்து!!

தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் ‘தேர்வை எதிர் கொள்ளாமல் மாணவர்கள் தேர்ச்சி அடைவது, அவர்களின் கல்வி ஈடுபாட்டை குறைத்து விடுகிறது,’ என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்வுகள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு நேரடியாக இல்லாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் பொதுத்தேர்வு காரணமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. அதே போல 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முடிய 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிக்க முடியாத நிலை உள்ளதாக புகார்கள் வந்ததால் 9, 10, 11 மாணவர்களுக்கு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான அரசாணையும் தமிழக முதல்வர் வெளியிட்டார்.

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களுக்கு ‘கட்டாயக் கல்வி’ – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

இந்நிலையில் கடந்த ஆண்டும் கொரோனா காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி வழங்கபட்டதால், இந்த ஆண்டும் தேர்ச்சி வழங்கப்படுவது மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “தமிழகத்தில் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டதால் அடிப்படை வாசிப்பு திறன் இன்றி உயர்கல்விக்கு செல்கின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!

இதன் காரணமாக மாணவர்களின் அடிப்படை கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. பள்ளிகளில் மதிப்பெண் தேர்வுகள் என்ற அடிப்படையில் கற்றல், கற்பித்தல் நடைபெறுகிறது. ஆனால் தற்போது தேர்வுகள் இல்லாத நிலை காரணமாக மாணவர்கள் எந்த அச்சமும் இன்றி அடுத்த வகுப்பிற்கு செல்கின்றனர். இதனால் பிற்காலத்தில் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஜேஇஇ நுழைவு தேர்வு முடிவுகள் – மார்ச் 7 ஆம் தேதி வெளியீடு!!

தற்போது கொரோனா தாக்கம் முடிந்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்ட பின்பு மாணவர்களுக்கு எழுதுவது, வாசிப்பது குறித்து தனியாக பயிற்சி அளிக்க வேண்டும். மாதிரித்தேர்வுகள், சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு, மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்து மட்டுமே அவர்களை பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க முடியும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!