ஜேஇஇ நுழைவு தேர்வு முடிவுகள் – மார்ச் 7 ஆம் தேதி வெளியீடு!!
ஜேஇஇ பிப்ரவரி மாதத்திற்கான நுழைவு தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஜேஇஇ நுழைவு தேர்வு:
இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் பொறியியல் பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க ஜேஇஇ நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு இந்த தேர்வுகள் 4 முறை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஜேஇஇ தேர்வுகள் பிப்ரவரி, மார்ச்,ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நான்கு கட்டங்களாக நடைபெறும் எனவும், நான்கு கட்ட தேர்வுகளிலும் மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்றாற்போல் கலந்து கொள்ளலாம் எனவும் அதில் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக மடம் வெங்கட ராவ் நியமனம்!!
இதன்படி பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த தேர்வுகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்