நாட்டிலேயே சிறந்து விளங்கும் காவல் துறை உயர் பயிற்சியகம் தமிழகம் தான்… விருதளித்த மத்திய உள்துறை அமைச்சகம்!
பொதுவாக ஆண்டுதோறும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நாட்டில் சிறந்து விளங்கக்கூடிய SI பயிற்சி மையத்தை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது பெருமிதம் அடைய செய்கிறது.
SI பயிற்சி மையம்
நாட்டில் சிறந்த எஸ்ஐகளுக்கான பயிற்சி மையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இதற்காக தனியாக நிபுணர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டுக்கான சிறந்த எஸ்ஐ பயிற்சி மையங்கள் குறித்து நிபுணர் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 23 அன்று சென்னை வண்டலூர் அருகே இருக்கும் தமிழக காவல்துறையின் உயர் பயிற்சியகத்தை நிபுணர் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் 2022ம் ஆண்டிற்கான நாட்டிலேயே சிறந்த பயிற்சி கட்டமைப்பு உடைய SI பயிற்சி மையமாக தமிழக காவல்துறை உயர் பயிற்சியகம் விளங்குவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனைத் தொடர்ந்து நேற்று தமிழக அரசிற்கு சுழற்கோப்பை வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சி மையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக ரூ.20 லட்சம் மானியத்தொகை வழங்கப்படும் என டிஜிபி அலுவலகம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download