தமிழக அரசு ஊழியர்களின் வாக்களிக்கும் உரிமை – உயர் நீதிமன்றம் உத்தரவு!!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் வாக்குரிமை மறுக்கப்பட கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு:
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இருந்த போதிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் வாக்களிக்கும் உரிமை பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள் உள்ள தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் பணி செய்பவர்கள் வாக்களிக்க பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதாகவும் அல்லது போதிய அவகாசம் கொடுக்கப்படுவதில்லை எனவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் 1,598 காலிப்பணியிடங்கள் – முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு!!
மேலும் 2019ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் கிட்டத்தட்ட 62 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியவில்லை எனவும், கொரோனா காலத்தில் அதிக வாக்குச்சாவடிகள் உள்ளதால் அதிக பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதால் அவர்களை தேர்தலுக்கு முந்தைய நாள் அதே வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்தடுத்து 5 நாட்கள் வங்கிகள் விடுமுறை – பொதுமக்கள் அச்சம்!!
இந்த மனு குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்த அறிவிப்பின் படி தேர்தல் பணியாளர்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்களிக்க முடியாது எனவும் தபால் வாக்குகள் மட்டுமே அனுமதிக்கப்பட முடியும் என தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலில் குடிமகனின் அடிப்படை உரிமை பாதிக்கப்படக்கூடாது. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.