மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு (DA) – 25% ஆக உயர வாய்ப்பு!!

1
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு (DA) - 25% ஆக உயர வாய்ப்பு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு (DA) - 25% ஆக உயர வாய்ப்பு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு (DA) – 25% ஆக உயர வாய்ப்பு!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தோராயமாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படும் என்று இந்த பதிவில் காண்போம்.

கொரோனா எதிரொலி:

நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் ஊரடங்கு முறை அமலில் உள்ளது. இதனால் அரசுக்கு வரி வசூல் பாதிக்கப்பட்டதால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் 30 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் – ஆணையர் அறிவிப்பு!!

மத்திய அரசின் அறிவிப்பு:

முன்னதாக மத்திய அரசின் அகவிலைப்படி நிறுத்தம் 2021 ஜூன் மாதம் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்தது. 3 தவணை அகவிலைப்படி கணக்கிட்டு இன்று 2021 ஜூலை மாதத்தில் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

அகவிலைப்படி கணக்கீடு:

2019 டிசம்பர் மாதம் வரை 17% DA தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை வழக்கமாக DA தொகை உயர்த்தப்படும். அதன்படி, 2020 ஆண்டிற்கு 4%, 2021 ஜனவரி மாதத்திற்கு 2% என இதுவரை 6% DA பணப்பலன் வழங்கப்படாமல் உள்ளது. 2021 ஜூலை மாதத்தில் இருந்து DA தொகை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 2021 ஜூலை மாதப்படி 2% என ஆக மொத்தம் 8% அகவிலைப்படியை உயர்த்தி 25% DA கணக்கிடப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இது கொடுக்கிற அரசாங்கம் இல்லை. மேலும் மேலும் வரி போட்டு தங்களுடைய கஜானாவை நிரப்பிக் கொண்டு எல்லாவற்றையும் மக்கள் நலத்திற்காக செலவழிக்கிறோம் என்று நொண்டிச் சாக்கு சொல்லும் அரசாங்கம்.பெட்ரோல் டீசல் கேஸ் விலை ஏற்றத்தில் இருந்து இந்த அரசாங்கத்தின் நோக்கம் தெரியவில்லையா? தேர்தல் நேரத்திலேயே விலையை குறைக்க மாட்டோம் என்று சொல்லுபவர்கள் தேர்தலுக்கு பின் எத்தனை வரிபோடுவார்கள் என்று தெரிகிறதா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!