50 வயதான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு – தமிழக அரசிடம் கோரிக்கை!!
தமிழக சட்டமன்ற தேர்தலில் 50 வயதிற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆசிரியர்கள் கோரிக்கை:
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஈடுபட உள்ளனர். கொரோனா காரணமாக 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
தேர்தல் பயிற்சி வகுப்புகளை ஞாற்றுக்கிழமை நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண் ஆசிரியர்கள், புற்றுநோய் நோயாளிகள் போன்ற கடுமையான நோய் தொற்றுள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு தொகுதி அடிப்படையில் அவர்கள் அதே பகுதியில் தேர்தல் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளிகளில் பருவத்தேர்வு!!
பெண் ஆசிரியர்களுக்கு வீட்டில் இருந்து 8 கி.மீ தொலைவில் பணிபுரியும் வசதி செய்து தர வேண்டும். ஆசிரியர்களுக்கு இரவு நேரத்தில் பணி முடிந்து செல்லும் போது பேருந்து வசதி செய்து தர வேண்டும். மேலும் தேர்தல் நடைபெறும் போது ஆசிரியர்களுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்