11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளிகளில் பருவத்தேர்வு!!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ள நிலையில். 12 மற்றும் 11ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் அளவில் பருவத்தேர்வுகளை பள்ளிகள் நடத்தி வருகின்றது.
கொரோனா தொற்று:
கடந்த மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கூட நடத்தப்படவில்லை. புதிய கல்வி ஆண்டும் வழக்கம் போல் இல்லாமல் ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகளில் தொடங்கியது. வழக்கமாக மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் மாதம் தொடங்கப்பட்டு முதல் பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதம் தொடங்கும்.
தொழிற்பள்ளிகள் துவக்க விண்ணப்ப பதிவு தொடக்கம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
காலதாமதம்:
கொரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டில் பள்ளிகள் ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை மே 3ம் தேதி நடத்த இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் தாமதமாக தொடங்கப்பட்டதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
பருவத்தேர்வுகள்:
உடுமலை கல்வி மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பயத்தை நீக்கும் வகையில் மார்ச் 1ம் தேதி முதல் பருவத்தேர்வுகளை நடத்திக்கிறோம். மேலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றது. பருவ தேர்வுக்கான வினாத்தாளை பள்ளிகளே தயாரித்து உள்ளது. தேர்வில் மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர் என்றும் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்